Rajking

.


Saturday, December 20, 2014

Office Xmax Celabrate.


















































Sunday, November 30, 2014

IT கம்பெனிகளுக்குள்

பளபளக்கும் தோற்றத்துடன் பரந்து விரிந்த கண்ணாடி கட்டிடங்கள், பகலிரவு பாராமல் வேலை நேரங்கள், ஆயிரங்களை கடந்து லட்சங்களிலும் சம்பளங்கள், அழைத்து செல்லவும் அனுப்பிவைக்கவும் கார்கள், மாதந்தோறும் கம்பெனி செலவில் கேளிக்கை கொண்டாட்டங்கள்,
பார்ப்பவர்களை எல்லாம் பொறாமை கொள்ளவைக்கும் பகட்டான வாழ்க்கை, ஆனால் பளபளக்கும் கட்டிடத்து பாத்ரூம் dustbin களை கிளறினால் பார்வையில் வரத்தவறுவதில்லை கலாச்சாரத்தை சீரழிக்கும் காண்டம்கள்! IT கம்பெனிகளுக்குள் ஆண்களுக்கு முழு சுதந்திரம், வெட்கம் மானத்ததோடு ஒரு பெண் உள்ளே சென்றால் அப்படியே திரும்பிவர முடியாது, பாலியல் சார்ந்த அத்துமீறல்களை நிர்வாகம் கண்டுகொள்வதில்லை, மாறாக ஆதரிக்கிறது, ஒரு ஆணும் பெண்ணும் எந்தவித கேடுகெட்ட உறவில் இருந்தாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை காரணம் அதுபோன்ற உறவுகளில் இருக்கும் ஆணோ பெண்ணோ ஒரே கம்பெனியில் வேலை செய்யும் போது அவ்வளவு எளிதாக அந்த கம்பெனியை விட்டு வெளியே செல்லமாட்டார்கள், அவர்களுக்கு கொடுத்த டிரைனிங்கிற்கு ஒரு சில வருடங்கள் வேலை செய்தாலே கம்பெனிக்கு கோடிக்கணக்கில் லாபம் வந்துவிடும், அந்த லாபத்திற்காக ஆண் பெண்களை சகஜமாக பழகவிட்டு காதல் என்ற பெயரில் உடல்ரீதியான கருமத்தை வளரவிட்டு காலாச்சாரத்தை சீரழிக்கும் IT கம்பெனிகளை வேறென்ன சொல்லமுடியும், ஒழுக்கம் கட்டுப்பாடு என்று உள்ளே செல்லும் பெண்களை வேற்றுகிரக வாசிகளை பார்ப்பது போல் பார்ப்பார்கள், கேலி செய்வார்கள், தான் வாழ்ந்துகொண்டு இருக்கும் வாழ்க்கை மீதே சந்தேகம் வருமளவிற்கு மனதை மாற்றுவார்கள், நடை உடை பாவனை பழக்கவழக்கம், மது, சிகரெட், செக்ஸ் என எல்லாவற்றையும் சர்வசாதாரணமாக மாற்றிவிடுவார்கள், ஏற்கனவே அதில் ஊறிப்போய் இருக்கும் ஆண்களும் பெண்களும் அதை முன்னிறுத்த நிர்வாகம் அதற்கு துணை நிற்கும், அடிக்கடி tour, trip, mind relaxation என வெளியூர்களுக்கு அழைத்து சென்று மது, போதை என சகஜமாக பழகவிட்டு தேவையற்ற உறவுகளுக்கு இவர்களே வழிவகுப்பார்கள், ஒவ்வொருவருக்கும் பிடித்த உணவு வகைகளை குறிப்பெடுக்கும் போதே எந்த
Brand மது என்பதை கேட்பார்கள், மது அருந்துவீர்களா என்பது கேள்வியில்லை, எந்த Brand மது என்பது தான் கேள்வியே, மது அருந்துவதை மறைமுகமாக ஊக்குவிப்பதும், அதன்மூலம் நடக்கின்ற தவறுகளுக்கு வழிவகுக்கும் இந்த கம்பெனிகளுக்கு மாடர்ன் மாமாக்கள் என்ற பெயரை விட வேறு எந்த பெயர் பொருத்தமாக இருக்கும்!? இதை அறியாத எத்தனையோ பெண்கள் விட்டில் பூச்சிகளாய் இந்த IT வெளிச்சத்திற்கு பலியாகிக்கொண்டு இருக்கிறார்கள், வேலையின் நோக்கம் பணம் மட்டுமன்றி கௌரவமும் கண்ணியமும் கூட அதில் அடங்கி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்! 

சின்ன வயசு கிரிக்கெட் ரூல்ஸ்:

* சிக்ஸ் அடுச்சா அவுட்டு
* 1பிட்ச் கேட்ச் இருக்கு
* தொடர்ந்து 3பால் விட்டா அவுட்டு
* டபுள் சைடுக்கு கடைசி பேட்டிங்
* நாங்க மட்டும் மெதுவா போட்டோம் நீயும் போடு
* ரன் அவுட் கடைசி வரை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது
* பக்கத்துல நிக்கிறவன் கேட்ச் புடுச்சா அது Ground tippu
* முள்ளுக்குள்ள பால் போச்சுனா ரன் ஒடக்கூடாது, அடுச்சவந்தான் போயி பந்த எடுக்கனும்
* பால் தொலஞ்சு போச்சுனா பேட்ஸ்மேன் அவங்களுக்கு வின்னிங் குடுத்தே ஆகனும்
* பேட் புடுச்சுட்டு வந்து பால் போடக்கூடாது, அந்த உரிமை கீப்பருக்கு மட்டுமே
* இருட்டியதும் Fast Bowl போட முடியாது
* முதல் பந்தில் அவுட் ஆனால் அது Trial Bowl
* Batting அணியில் இருந்தே ஒரு அப்பாவி Umpire ஆக அனுப்பப் படுவார்.

வெளிநாடுவாழ் இந்தியரின் ஏக்கம் ...

"கல்யாணம் பண்ணிப்பார்" "புது வீடு கட்டிப்பார்"
அப்பிடியே இதையும் சேத்துக்கோங்க
"வெளிநாடு வந்துப்பார்"
பாக்குறதுக்குத்தான் ஆடம்பரம் ஆனா இது ஒரு மாய வலை! சந்தோஷமா உள்ளையும் இருக்க முடியாது
வேணாம்னா வெளியவும் போக முடியாது....
நல்லது, கெட்டது பிறப்பு, இறப்பு வரவு, செலவு
இதெல்லாம் ஒரே ஒரு தொலைபேசி அழைப்போடு முடிஞ்சிரும்.
வலிக்கும் ஆனா சொல்ல முடியாது
அப்பிடியே சொன்னாலும் யாருக்கும் புரியாது...
புரிஞ்சுக்கவும் மாட்டாங்க,அழுவோம் ஆனா யாருக்கும் தெரியாது.. ஏன்னா இங்க பாக்குறதுக்கு யாரும் இருக்க மாட்டாங்க....
வலின்னா தோள் சாயவும் சரி..
சந்தோஷம்னா அணைக்கவும் சரி...
கண் எட்டும் தூரம் வரை தனிமை மட்டும் தான் மிஞ்சும்.
நன்றாக பசிக்கும் நிறைய சாப்பிடவும் செய்வோம்
ஆனா வயிறு நிறையாது....
ஏன்னா எங்கையாவது ஒரு மூலையில ஒரு விதமான ஏக்கம் இருந்துக்கிட்டே இருக்கும்.....
நியாயமா பாத்தா ஊர்ல இருந்துதான் நமக்கு யாராவது ஃபோன் பண்ணி விசாரிக்கணும், ஆனா அப்பிடி யாரும் கூப்பிட போறதில்லைன்னும் தெரியும்....
தெரிஞ்சும் யாராவது விசாரிக்கமாட்டாங்களான்னு ஏக்கம் இருந்திட்டே இருக்கும்....
ஆனா குடும்பத்துல யாருக்காவது ஒருத்தருக்கு 2 வாரம் நாம ஃபோன் பண்ணாம, பண்ணிபாருங்க
நம்ம கிட்ட கேப்பாங்க பாருங்க.....
"என்னப்பா வெளிநாடு போன உடனே எங்களையெல்லாம் மறந்திட்ட போல"
அப்பவும் இங்கிருந்து சிரிச்சிக்கிட்டே பதில் சொல்லணும்!!
"உள்ளுக்குள் காயங்கள் உண்டு...
அதை நான் மறைக்கிறேன்...
ஊருக்கு ஆனந்தம் குடுக்க..
வெளியே சிரிக்கிறேன்"...
இதெல்லாம் ஏன் சொல்றேன்னா
ம்ஹூம் ஏன்னு தெரில
சும்மா சொல்லணும் போல தோணிச்சு
சிரிச்சிக்கிட்டே ஸ்மைலி..!!
--------------------------------------------வெளிநாட்டு வாழ் தமிழர் (நன்றி )

Saturday, November 22, 2014

Team Outing..












































Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger | Printable Coupons