2011-12-11 ~ Rajking

.


Thursday, December 15, 2011

*~*தரையிறங்கிய நிலவு*~*

அகிலமே இருண்டிருந்த
அந்திமாலை வேளையது
விட்டத்தைக் கண்டவாறே
விழுந்திருந்தேன் கட்டிலிலே

ஒளிவிளக்கு கைகளில்
ஏந்திவந்த பெண்ணழகு
உடன்வியந்து எழுந்தேனே
இளமஞ்சள் ஒளியினாலே
அழகுபொன் முகமது
அந்திநேர ஆதவனோ!!

தீண்டிடவே முற்பட
தலைகவிழ்ந்தொரு குறுநகை
வெண்ணிற ஆடையில்
வெட்கித்தான் சிவந்தாளோ
உரையாதோ!! நீளாதோ!!
உணர்த்திட்ட மின்னணைப்பு...

*~*பெண்..........*~*

கள்ளிப் பாலையும்
கருவை முள்ளையும்
கடந்து வந்தவள் நான்..

முப்பத்து மூன்றே
முடிவாய்க் கொடுத்தாலும்
முக்காலம் ஜெயிப்பவள் நான்.

நல்லதும் நன்மையும்
நிரம்பிக் கிடக்கும்
நாளையப் பெண்ணும் நான்..

ஒளிவட்டம் சூடாமல்
உயர்வாய் உயரும்
உலகின் எதிர்காலம் நான்..

*~*மரணம் நிச்சயம்!*~*



வாழ்வின் சுவர்களில்
கொட்டை எழுத்தில்
எழுதப்படுகிறது மரணம்
படிக்க மட்டுமே நாளாகிறது!

எத்தனையோ பேரின் மரணத்தில்
நிகழ்வதில்லை பாடம்

என் வீட்டின் ஒரு சின்ன மரணம்
மாற்றி விடுகிறது என் பாதையையும்
வாழ்க்கையையும்,

வாழ்க்கையை கடைசியாய் புரட்டும் நாளில்
பாடம் புகுத்தப்பட்டுள்ளது புரியும் புள்ளியில்
நிகழ்கிறது -
தனக்கான மரணம்!

யாரும் பயந்துவிடாதீர்கள்
பயம் கொள்வதால்
விட்டா செல்கிறது மரணம்?

விட்டு செல்லுங்கள் மரணத்தை
துணிவிருந்தால் வந்து நம்மை
பெற்றுக் கொள்ளட்டும் மரணம்

பெறாத மரணத்தில்
எனக்கென்னவோ வாழ்வதாகவே
தெரியவில்லை -
நிறைய பேரின் வாழ்க்கை!

என்ன தான் மனிதன்
செய்தாலும் - மனிதனை
செத்து தொலை என்று
சொல்ல விடுவதேயில்லை மரணம்

மீறி சிலர் சொல்கிறார்கள்
ஏன் கொலை கூட செய்கிறார்கள்
மனிதரற்றோர்

மரணம் அவர்களை
மன்னிப்பதேயில்லை, மாறாக
தினம் தினம் கொள்கிறது,

கடைசி ஓர்நாளில்
அவர்கள் சடலம் மட்டும் எரிக்கவோ புதைக்கவோ
தூக்கி எங்கேனும் வீசவோ செய்யப்படும் நாளில்
அவர்களை இறந்ததாக -
கருதி மட்டுமே கொள்கிறது (அவர்களின்) உடல்!

பெரிய மிராசுதார்
பிச்சைக்காரன்
ஆண்
பெண்
சாமி
குடிகாரன்
திருடன்
நல்லவன்
கெட்டவன்
யாரையுமே பார்ப்பதில்லை மரணம்
ஆனால் -
நெருங்கும் முன்
நன்றாகப் பார்த்துக் கொள்கிறது!

*~*லீவ் லெட்டர்*~*

"போருக்கு போற மன்னர் பொற்காசுகளை மூட்டையா கொண்டு போறாரே.....எதுக்கு?" "போர்க்களத்துல அதை வீசி, எதிரி படைவீரர்களை திசை திருப்பத்தான்"!

"டாஸ்மாக்ல வேலை பார்க்கறதும், டெய்லர் கடையில வேலை பார்க்கறதும் ஒண்ணுதான்...." "ஏன்னா, ரெண்டு கடையிலயும் வர்றவங்ககிட்ட "ஆஃபா', 'ஃபுல்லா'ன்னுதான் முதல்ல கேக்கணும்!

"எக்ஸ்ரே எடுக்க எவ்வளவு நேரம் ஆகும் டாக்டர்...?" "நீங்க பாக்கெட்ல இருந்து பர்ஸை எடுக்க ஆகுற நேரம் தான்...!"

"லீவ் லெட்டருக்கும் லவ் லெட்டருக்கும் என்ன வித்தியாசம்....?" லீவ் லெட்டரை டீச்சர்கிட்ட கொடுக்கணும்; லவ் லெட்டரை டீச்சரோட பொண்ணுகிட்ட கொடுக்கணும்!

"உங்களை மரியாதைக் குறைவா திட்டிட்டேன்னு மனசு சங்கடமாவே இருந்தது..." "அதுக்காக மன்னிப்பு கேட்க வந்திருக்கீங்களா....?" "இல்லை... மரியாதையா திட்டிட்டுப் போலாம்னு வந்தேன்!"

*~*இவன் அவன்*~*


இவன்(மனிதன்) விதியை வெல்லலாம்
இவன் மதியை வெல்லலாம்
இவன் காற்றை கிழிக்கலாம்
இவன் காட்டை அழிக்கலாம்
இவன் மரத்தை பிடுங்கலாம்
இவன் மண்ணை அரிக்கலாம்
இவன் கடலை குடையலாம்
இவன் மலையை துளைக்கலாம்
இவன் வானத்தில் ஓட்டையிடலாம்
அவன்(இயற்கை) மீண்டும் கோபப்படலாம்
இதற்கு எல்லாவற்றிக்கும்
எதிர் வினை புரியலாம்
சுனாமி, பூகம்பம், வெள்ளம்......
இயற்கையாய் மனிதன் தோற்பதில்லை
இயற்கையிடமே மனிதன்
தோற்கடிக்கப்படுகிறான்.......

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger | Printable Coupons